Posts

Showing posts from July, 2019
Image
கவிதை உலகில் வலம் வருகிற அரசுப் பள்ளி மாணவனின் அடுத்த சாதனை! ********************************************* கவிஞர் சங்கமம் என்ற குழுமம் சார்பில் புலனம் வழியாக நடந்த தினசரி கவிதைப் போட்டியில் நான்காம் பரிசு பெற்றதற்காக 28-07-2019 அன்று புதுச்சேரி, புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த விழாவில் மதுரை,மேலூர் அருகேயுள்ள அ.வல்லாளபட்டி அரசுப் பள்ளியில் பயிலும் வ.வரதராஜன் என்ற மாணவருக்கு வெள்ளி நாணயமும் சான்றிதழும் வழங்கப்பட்டது.இந்த விழாவில் பாவேந்தர் பாரதிதாசனின் பேரன் கலைமாமணி கோ.ரவி ஐயாவும் நேர்மையான அரசியல்வாதி மக்கள் சேவையை விரும்பும் மனிதர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தனவேலு ஐயா அவர்களும்  கலந்து கொண்டனர்.
Image
"கவித்தேனமுது விருது" பெற்று அரசுப் பள்ளி மாணவன் சாதனை: 14-07-2019 அன்று  சந்திரோதயம் கவிக்குழுமத்தின் இரண்டாம் ஆண்டு விழாக் கவியரங்கம் மதுரை பியர்ல்ஸ் விடுதியில் நடந்தது.இக்கவியரங்கில் மதுரை மேலூர் அருகிலுள்ள அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த வ.வரதராஜன் என்ற மாணவர்  "கர்வம் கொள்ளடி கண்ணம்மா"  என்னும் தலைப்பில் கவிபாடி "கவித்தேனமுது விருது" பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழ் கலை இலக்கிய மையம் சார்பில் மரபுக்கவிதை, புதுக்கவிதைப் போட்டிக்கு அழைப்பு: *தமிழ் இலக்கிய ஆய்வு மையம் நடத்தும்...* *சிறுகதைப் போட்டி...* *தர்ஷிணி சிறுகதை விருது..* *சிறுகதைகள் சுயமாக எழுதப்பட்டதாக இருத்தல் வேண்டும்..* *ஆறு பக்கங்களுக்கு மிகாமல் தட்டச்சு செய்து அனுப்பிட வேண்டும்...* *சிறுகதை அனுப்புவதற்கு கடைசி தேதி. 30.8.19.* *சிறுகதைகள் அனுப்ப வேண்டிய முகவரி...* *தர்ஷிணி பதிப்பகம்.39/18.ஏழுமலையான் நகர்.உதயமாம்பட்டு ரோடு,தியாகதுருகம் 606206 * *தமிழர் கலை இலக்கிய மையம் நடத்தும்...* *மரபுக் கவிதைப் போட்டி...* *பாரதிசுகுமாரன் மரபுக்கவி விருது..* *கவிதைகள் இலக்கணத்தில்... ஏதேனும் ஒரு பா வகையில் இருந்திட வேண்டும்...* *மரபுக் கவிதையை ஊக்குவிக்கவே இந்த முயற்சி...* *மலரட்டும் மனித நேயம்... என்ற தலைப்பில் 32 வரிகள் வருவது போல் எழுத வேண்டும்..(அடிகள் அல்ல)* *கவிதைகள் அனுப்புவதற்கு கடைசி தேதி...30.8.19* *கவிதைகள் அனுப்ப வேண்டிய முகவரி..* *தமிழர் கலை இலக்கிய மையம். 2/121.பெருமாள் கோயில் தெரு. மணம்பூண்டி. திருக்கோவிலூர். 605759 . விழுப்புரம் மாவட்டம்...
Image
மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் முதலிடம் பெற்று அரசு பள்ளி மாணவன் சாதனை: மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் முதலிடம் பெற்று அரசு பள்ளி மாணவன் சாதனை:*  இந்திய கிரிக்கெட் வீரர் எம். எஸ்.தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு "சிபி ஸ்போர்ட்ஸ் பவுண்டேசன்" சார்பில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி மதுரை காந்தி மியூசியத்தில் 7-7-2019 ஞாயிறு அன்று காலை நடைபெற்றது.  இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். 10 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள  அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர் எம்.சந்தோஷ் மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் 5 புள்ளிகளை பெற்று, முதல் இடத்தை பிடித்தார்.  பரிசளிப்பு விழாவில் மாணவர் எம். சந்தோஷூக்கு  பெரிய கோப்பையும், சான்றிதழும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  ஆறுதல் பரிசுகள் இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் எஸ்.தேவ்நாத் மற்றும் பி.பிரபாகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.  போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திர...
சமூகக் கொடுமைகள் *********************** இனவெறி அடங்காத வெறி நாய்கள் தேவாலயங்களையும் விட்டு வைக்க வில்லை! பால் மணம் மாறாப் பிஞ்சுக் குழந்தைகளின் அலறல் சத்தம் செவிகளைத் துளைக்கின்றன! உலகத்தையே உயர் நிலைக்குக் கொண்டு செல்லும் உண்ணதப் பிறவியே பெண்! அவளும் சுதந்திரமாய் நடமாட முடியவில்லை இந்தக் கொடுமைகள் நிறைந்த சமூகத்திலே! தெய்வமாக மதிக்கப் படுபவள் இன்று சில வெறி நாய்களாலே பலாத்காரம் செய்யப்பட்டு தெரு வோரத்தில் பிணமாக வீசி எறியப் பட்டுக் கிடக்கின்றாள்! தெய்வத்திற்கு நிகரான குழந்தைகளையும் விட்டு வைக்க வில்லை பாலியல் கொடுமை! செய்வதறியாது விளையாட்டுப் பிள்ளைகளாய் இருக்கும் பிஞ்சுக் குழந்தைகளை நாசம் செய்கின்றனர் பாவிகள்! படித்து பட்டம் பெற்று உயரச் செல்ல நினைக்கும் எதிர்கால சாதனைப் பறவைகளை இறக்கையை ஒடிக்கும் குழந்தை மணமும் ஒழியவில்லை சில கிராமங்களில்! சமூகத்தில் சில வெறி கொண்ட நாய்களாலே சமூகமே கொடுமையால் நிறைந்துள்ளது! தலை விரித்தாடும் சமூகக் கொடுமைகள் ஒழிந்தாலே பாரதம் முன்னேறும்! கவிஞர்.வரதராஜன், மதுரை. அலைபேசி: 8220574435
*சுயசரிதைகள் - எழுதிவர்கள்.* 🖋 My Experiments with truth - மகாத்மா காந்தி 🖋 An autobiography - ஜவஹர்லால் நேரு 🖋 Prison's diary - ஜெயப்ரகாஷ் நாராயணன் 🖋 Mein Kemf - அடால்ஃப் ஹிட்லர் 🖋 My Reminicenses - ரவீந்திரநாத் தாகூர் 🖋 Wings of Fire - ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் 🖋 The Insider - பி.வி. நரசிம்மராவ் 🖋 My Presidential Years - ஆர். வெங்கட்ராமன் 🖋 I Dare - கிரண்பேடி 🖋 My music My Life - பண்டிட் ரவிசங்கர் 🖋 Autobiography of an Unknown Indian - நிராத் சி. சௌத்ரி 🖋 Friends not Masters - அயூப்கான் 🖋 Playing in my way - சச்சின் டெண்டுல்கர் 🖋 Daughter of the East -  பெனாசிர் பூட்டோ 🖋 My Life - பில் கிளிண்டன் 🖋 Freedom in Exile - தலாய் லாமா 🖋 Son of My Father - டாம் மோரிஸ் 🖋 Revenue Stamp - அம்ரிதா ப்ரிதம் 🖋 My Days - ஆர்.கே. நாராயணன் 🖋 என் சரிதம் - உ. வே. சாமிநாதன் 🖋 என் கதை - நாமக்கல் கவிஞர் 🖋 என் வாழ்க்கை குறிப்புகள் - திரு. வி. க 🖋 நான் என் பிறந்தேன் - எம்.ஜி.ஆர் 🖋 வனவாசம் மனவாசம் - கண்ணதாசன் 🖋 இதுவரை நான் - வைரமுத்து 🖋 நெஞ்சிக்கு நீதி - மு...

என்ன இல்லை எம் தமிழில்?

என்ன இல்லை எம் தமிழில்? உலகில் முதலாகத் தோன்றி,மூத்த மொழியாக இருக்கின்றது எம் தமிழ்! அந்நியரையும் அன்போடு  ஈர்த்து தரணியில் ரசிகர்களை பெற்றுள்ளது எம் தமிழ்! முன்னோடியான பழம் பெரும் இலக்கணங்களையும், மூத்த பல்வேறு இலக்கிய அமைப்புகளையும் கொண்டு மிளிர்கிறது எம் தமிழ்! முச்சங்கம் வளர்த்த மூத்த மொழியும், செவ்வியல் தன்மைகளைக் கொண்டதும்,சிறந்த மொழியும் எம் அன்னைத் தமிழே! செந்தமிழ் பைந்தமிழ் என்ற செல்லப் பெயர்களைக் கொண்டதும் எம் தாய் தமிழே! ஒலிப்பதற்கு இனிமையான ஓசையைக் கொண்டாய்! காதலிக்காதவரையும் உன்னை காதலிக்க வைத்தாய்! தரணிக்கே தாய் மொழியாய் திகழ்கின்றாய்! பிற மொழிகளையும் வளர வைக்கின்றாய்! என்ன இல்லை எம் தமிழில்? பெயர் பெற்ற முதுமை இல்லையா? ஈர்க்கும் தன்மை தான் இல்லையா? சிறந்த நூல் அமைப்புகள் இல்லையா? செல்லப் பெயர்கள் தமிழுக்கு இல்லையா? இனிமையான ஓசைதான் தமிழுக்கு இல்லையா? எல்லாம் இருக்கின்றது எம் தமிழில்! சிறந்த பண்பும் உண்டு எம் தமிழில்! கவிஞர்.வ.வரதராஜன், மதுரை. அலைபேசி: 8220574435